7 26
இலங்கைசெய்திகள்

யாழில் விசேட தேவையுடைய யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது

Share

யாழில் விசேட தேவையுடைய யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது

யாழில் விசேட தேவையுடைய 18 வயது யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் அவரின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு உடல் நிலை சரியில்லாததன் காரணமாக கடந்த 14ஆம் திகதி அவருடைய தாய் அவரைப் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார். பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடைய சகோதரியின் கணவரும் (சிறிய தந்தை) இன்னும் இருவரும் இணைந்து, அந்த யுவதியைத் தொடர்ச்சியாக தகாத முறைக்கு உட்படுத்தி வந்தனர் என்று பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் சிறிய தந்தையான 46 வயதுடைய நபரையும், 28 வயதுடைய மற்றைய இருவரையும் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...