11 15
இலங்கைசெய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

Share

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.

இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...