1 27
இலங்கைசெய்திகள்

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

Share

வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலக்க தனது வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ கடமைகளுக்கு உதவுவதற்கு வீட்டு உதவியாளர்களை அழைத்துச் செல்வதற்கு, இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் வசதி செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹிமாலி அருணாதிலக்க, அவுஸ்திரேலியாவிலிருந்து, கடமை முடிந்து புறப்படுவதற்கு முன், அவருடைய ஊழியரின் சம்பளமாக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊழியரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து மூன்று வருடங்களில் இரண்டு நாட்கள் மாத்திரமே விடுமுறை வழங்கிய அருணாதிலக்க தொடர்பில் முறையாக ஆராயத் தவறியதற்காக, பிராந்திய நீதிமன்ற நீதிபதி, அவுஸ்திரேலியாவின் உள்விவகார திணைக்களத்தை கடுமையாக சாடியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், அவர் தமது முன்னாள் வீட்டுப் பணியாளருக்கு 543,000 டொலர்களை சம்பளம் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கென்பராவில் பணியாற்றிய ஹிமாலி அருணதிலகா, தனது ஊழியரான பிரியங்கா தனரத்னவுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மறுத்துள்ளார்.

இதன்போது, தனரத்ன வாரத்தில் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணிபுரிந்ததாகவும், சமையல் எண்ணெயில் கையை எரித்த பிறகு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் நீதிபதி எலிசபெத் ராப்பர் கண்டறிந்தார்.

இந்த காலகட்டத்தில், அவருக்கு வெறும் 11,200 டொலர் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 75 சத டொலர் கொடுப்பனவு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...