24 66bff92592ec9
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை: எதிராக போராட்டம்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை: எதிராக போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (Bandaranaike International Airport) ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு விமான நிலைய பேருந்து சேவைக்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது விமான நிலைய – கோட்டை பேருந்து ஊழியர் சங்கத்தினரால் நேற்று (16.07.2024) நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர, “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை வழங்க முடியாது.மேலும், புதிய பேருந்துகளுக்கும் இது பொருந்தும்.

தொழிற்சங்கத்தின் கீழ் 71 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 பேருந்துகள் நாளாந்தம் இயங்குவதில்லை என்றும், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே இயங்குகின்றது.

தமது ஒன்றியம் இதற்கு முன்னர் விமான நிலைய பேருந்து சேவையை ஆரம்பித்திருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்டது.

குறித்த பேருந்துகள் தேவையில்லை என மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.

உண்மையான தேவை இருப்பின் தற்போது ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நாளாந்தம் இயங்காத 42 பேருந்துகளை புதிய சேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...