30 3
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

Share

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

உலகத் தமிழர் இயக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத அமைப்புகளாக தக்கவைத்துக்கொள்ளும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் வலையமைப்பு, சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல்களை கொண்டிருப்பதாக கனடா கூறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைளுக்காக, அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதற்கு WTM என்ற உலக தமிழர் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக கனடாவின் மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

இந்தநிலையில், கடுமையான மீளாய்வு செயல்முறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் தொடர்வதை உறுதிப்படுத்துகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது.

அத்துடன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வமான தேவையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அண்மைய மதிப்பாய்வு செயல்முறை 2024 ஜூனில் நிறைவடைந்ததாக இலங்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...

001
உலகம்செய்திகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும்! – சகோதரர் ஆண்ட்ரூ கைது குறித்து மன்னர் சார்லஸ் அதிரடி அறிக்கை!

பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தனது தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்துப்...