30 3
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

Share

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

உலகத் தமிழர் இயக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத அமைப்புகளாக தக்கவைத்துக்கொள்ளும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் வலையமைப்பு, சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல்களை கொண்டிருப்பதாக கனடா கூறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைளுக்காக, அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதற்கு WTM என்ற உலக தமிழர் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக கனடாவின் மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

இந்தநிலையில், கடுமையான மீளாய்வு செயல்முறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் தொடர்வதை உறுதிப்படுத்துகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது.

அத்துடன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வமான தேவையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அண்மைய மதிப்பாய்வு செயல்முறை 2024 ஜூனில் நிறைவடைந்ததாக இலங்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...