27 7
இலங்கை

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Share

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் பல சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா விடுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக அநுராதபுரம் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டெமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸின் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு நாட்டின் சுற்றுலா வணிகமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவில்லை, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால், இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், கடன் வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

கடன் பெற்ற ஹோட்டல் உரிமையாளர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தற்போது, ​​தனியார் வங்கிகளில் எங்கள் ஹோட்டல்களை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளோம்.

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இதுவரை அனுராதபுரத்தில் உள்ள எனது 2 முக்கிய ஹோட்டல்கள் வங்கியால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட அந்த ஹோட்டல்களை, வங்கிகள் முறையாக பராமரிக்கவில்லை. ஏலம் விட நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, ​​அந்த ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள், தோட்டங்கள், கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.

இதன் காரணமாக 7,8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இந்த ஹோட்டல்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

கடனில் இருந்து விடுபட முடியாது. எனவே, இவ்விடயத்தில் பொறுப்பானவர்கள் தலையிட்டு அனுராதபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என டெமியன் பெர்னாண்டோ கேட்டுக் கொண்டார்.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் புதிய மைல்கல்: இந்த ஆண்டில் 7 இலட்சம் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...