6 24
இலங்கை

இலங்கையர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

Share

இலங்கையர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2012 தொடக்கம் 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளதுடன் 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உயர்வடைந்தது.

அத்தோடு, 2022 ஆம் ஆண்டு நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது.

அதன்விளைவாக, ஒருவர் அவரது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி 15,970 ரூபாவாக மிகையான அளவினால் அதிகரித்தது.

மேலும், இப்பெறுமதி இவ்வாண்டு ஜனவரியில் 18,350 ரூபாவாகவும் மற்றும் மே மாதத்தில் 17,608 ரூபாவாகவும் உயர்வடைந்திருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....