33
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

Share

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்களிக்க மக்கள் நாடு திரும்புகிறார்கள் என தகவல்கள் வெளியாகின.

எனினும் அந்தளவு அதிகரிப்பான பயணிகள் இதுவரை வரவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...