23 5
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை

Share

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக சமுர்த்தி வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 3241 கோடி ரூபாய் பணத்தினை மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சமுர்த்தி வங்கியினால் 11929 மாவீரர்களுக்காக வழங்கப்பட்ட 355 கோடி ரூபா கடன் தொகையில் 19 கோடி ரூபாவிற்கு மேல் இதுவரை வசூலிக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மாவீரர் வீடமைப்புத் திட்டத்துக்காக சமுர்த்தி அதிகாரசபைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியானதால், தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கோவிட் நோயினால் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முறைசாரா முறையில் இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...