1 23
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்

Share

ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீர் பற்றாகுறையை தீர்ப்பதற்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் நீரை சேமிப்பதற்காகவே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களில் மழை நீரை சேகரித்து, அந்த நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி பயன்பாட்டுக்கு உகந்த நீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இதுவரை ஒன்பது சேமிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கன மழை பெய்யும் பொழுது நிரம்பி வழியும் கழிவு நீர் பிரச்சினைக்கு இந்த பிரம்மாண்ட பள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதன்போது, சேமிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மழையின் பின் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆறுகளில் விடுவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான திட்டங்களினால் மழைநீர் வீணாவதைத் தடுப்பதுடன்அந்த நீரை சேகரித்து சுத்திகரித்து பயிர்களுக்கு பயன்படுத்த கூடியதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...