14 9
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Share

தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு இன்னும் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

10 பில்லியன் வரம்பு, சில வேளைகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை வாக்குச் சீட்டுக்கு அதிகமாக இருந்தால், அதிகரிக்கப்படலாம்.

அந்த வகையில், ஒரு வேட்பாளருக்கு சுமார் 100 மில்லியன் ருபாய் கூடுதல் செலவாகும்.

இருப்பினும், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமும் குறிப்பிட்டுள்ளது.

ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது.

அத்துடன் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் எஞ்சியுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...

image 1200x800 20
செய்திகள்உலகம்

நாவல்னி மரணத்தில் புதிய திருப்பம்: தவளை விடம் பயன்படுத்தப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சித் தகவல்!

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நாவல்னியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை...