19 8
இந்தியாசெய்திகள்

தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

Share

தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகளை விடுவிக்கவும், அவர்களை மீட்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 35 கடற்றொழிலாளர்கள் 4 நாட்டுப் படகுகளுடன் வியாழக்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் ஜெய்சங்கரிடம் இருந்து இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.

இதற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த 35 பேரும், ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு வாரியபொல சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஜெய்சங்கருக்கு நேற்று ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இரண்டு தமிழக கடற்றொழிலாளர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்

எனினும் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கப்படாமை வருத்தமளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்கும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வலுவான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...