2 18
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு

Share

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு

இலங்கையில், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (e – passport) அறிமுகப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

கடவுசீட்டுக்காக தற்போது செலுத்தப்படும் தொகையை செலுத்தி குறித்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் ஒக்டோபர் மாதம் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ளுவது சிறந்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், புதிய வசதிகள் மற்றும் ‘Chip’ உடன் கூடிய கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...