1 14
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

Share

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

ஆளும் கட்சியில் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காத தரப்பினர் இவ்வாறு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.வீ.சானக்க, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு தங்களது இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது அமைச்சு பதவிகளை வகிப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.i89

இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...