1 14
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

Share

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

ஆளும் கட்சியில் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காத தரப்பினர் இவ்வாறு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.வீ.சானக்க, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு தங்களது இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது அமைச்சு பதவிகளை வகிப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.i89

இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...

world 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் சோகம்: பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற மாணவி விபத்தில் பலி!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (ஏப்ரல் 10, 2026) நண்பகல்...