5 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், தமது கொள்கையை அறிவிப்பதற்காக சங்க மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசியல் செல்வாக்கு இல்லாத குறைந்தது 5,000 பௌத்த பிக்குகள் பங்கேற்கும் சங்க மாநாடு எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.

“சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க (AKD) ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் கொள்கைகளை மகா சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும்.

பொதுமக்களை இலக்காகக் கொண்டு, நிலைமை மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் இந்த தலைவர்கள் அடிக்கடி பல்வேறு கொள்கைகளை அறிவிக்கின்றனர்.

எனவே, பிரதான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்து, பொதுக் கொள்கையொன்றை பிரகடனப்படுத்தி, புதிய ஜனாதிபதி தொடர்பில், மக்கள் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க பொதுபலசேனா உதவவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...