5 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், தமது கொள்கையை அறிவிப்பதற்காக சங்க மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசியல் செல்வாக்கு இல்லாத குறைந்தது 5,000 பௌத்த பிக்குகள் பங்கேற்கும் சங்க மாநாடு எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.

“சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க (AKD) ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் கொள்கைகளை மகா சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும்.

பொதுமக்களை இலக்காகக் கொண்டு, நிலைமை மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் இந்த தலைவர்கள் அடிக்கடி பல்வேறு கொள்கைகளை அறிவிக்கின்றனர்.

எனவே, பிரதான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்து, பொதுக் கொள்கையொன்றை பிரகடனப்படுத்தி, புதிய ஜனாதிபதி தொடர்பில், மக்கள் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க பொதுபலசேனா உதவவுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...