17 3
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒவ்வொரு நாளும் மாவட்ட மட்டத்திலும் உள்ளுராட்சி மட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் திரண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவும் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...