8 7
இலங்கைசெய்திகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

Share

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க(anura kuma dissanayaka)உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று சொத்துப் பிரகடனங்களை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய சொத்துப் பிரகடனச் சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பொதுப் பிரதிநிதிகளும் சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததோடு, இதன்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்.

முன்னர், அரசியல்வாதிகளின் சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் புதிய சட்டத்தின்படி, அந்த சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...