1 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய அனைத்து புலனாய்வுப் பிரிவுகளிலிருந்தும் புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தற்போதும் புலனாய்வு அறிக்கைகள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆராய தனியான புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்படாத வகையில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...