1 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய அனைத்து புலனாய்வுப் பிரிவுகளிலிருந்தும் புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தற்போதும் புலனாய்வு அறிக்கைகள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆராய தனியான புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்படாத வகையில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...