24 66ae4501cbf32
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரித்துள்ள குடும்பத் தகராறுகள்: பொலிஸார் அறிக்கை

Share

நாட்டில் அதிகரித்துள்ள குடும்பத் தகராறுகள்: பொலிஸார் அறிக்கை

தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.

கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை, உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...