24 66adcf03d0af1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக உருவாகும் இளம் அரசியல் கூட்டணி

Share

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குழு, இளைஞர் தலைமையுடன் தனிக் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இந்த புதிய கூட்டணியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை கவரும் அடையாளத்துடன் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமகால ஜனாதிபதியிடம், இந்த புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு அறிவித்திருந்தது.

இருந்த போதிலும், அந்த யோசனையை நிராகரித்த ஜனாதிபதி, இளம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு ஒரு இளம் அரசியல்வாதியை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவர் கூட்டணியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணியின் ஆதரவாளர்களாக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுவார்கள். புதிய கூட்டணியின் அனைத்து பதவிகளும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியின் வெற்றியை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் செயற்பாட்டாளர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த புதிய கூட்டணி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வெளிவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மக்கள் ஐக்கிய முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...