19 1
இலங்கைசெய்திகள்

அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸார்

Share

அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், சிரேஷ்ட பிரதி தேர்தல்கள் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளது.

11 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றுஸஅதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நிர்வாக விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....