24 66aaafc17ca5a
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் சொத்து குவித்துள்ள பசில்: போட்டுடைக்கும் விமல் வீரவன்ச

Share

அமெரிக்காவில் சொத்து குவித்துள்ள பசில்: போட்டுடைக்கும் விமல் வீரவன்ச

ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்தை பசில் ராஜபக்ச அமெரிக்காவில் குவித்துள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், அமெரிக்காவில் (USA) பசில் ராஜபக்சவிற்கு (Basil Rajapaksa) உள்ள சொத்தை சரியாக மதிப்பீடு செய்து கணக்கீடு செய்தால், அதை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்காக பசில் ராஜபக்ச பணம் பெற்றுக்கொண்டாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யாரிடமும் பணம் கேட்கும் நிலை பசில் ராஜபக்சவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் முதலாவது பணக்காரராக பசில் ராஜபக்ச இருக்கலாம் எனவும் , மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அப்படியல்ல என்றும், நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...