9
இலங்கைசெய்திகள்

விலை திருத்தம் இல்லை! எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அறிவிப்பு

Share

விலை திருத்தம் இல்லை! எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்தே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது எந்த பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...