1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை

Share

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தேர்தலை நடத்துவது தொடர்பான ஆதரவை பொலிஸார் வழங்குவார்கள் என அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்புக்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதி தேர்தல்கள் மா அதிபர் மற்றும் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தேவையான பொலிஸ் அதிகாரிகளை வழங்குவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...