இலங்கைசெய்திகள்

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

Share
20 11
Share

நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை…!

தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள விடயமானது தேர்தலில் வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமா என கொழும்பு பல்கலைக்கழத்தின் (University of Colombo) பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

எனினும் கடந்த கால பொருளாதார நெருக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான இலங்கை மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் அனுபவிக்க தகுதி உடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.

இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில நாட்டில் பலர் உள்ளனர். இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எந்தவித கரிசனையும் காட்டாமல் இருந்த அரசாங்கம் தங்க நகை அடமானம் தொடர்பில் கொண்டு வரும் திட்டம் எந்த அளவு நம்பகமானது என சந்தேகம் எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...