1 40
இலங்கைசெய்திகள்

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி

Share

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம், குற்ற விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சருக்கு சொந்தமான கடன் அட்டையை பயன்படுத்தி மோசடியான முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து இலட்சம் ரூபா கடன் உச்ச வரம்பினைக் கொண்ட இலங்கை வங்கிக் கடன் அட்டை ஒன்றைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடியான முறையில் கடன் அட்டையை பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...