5 44
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு நன்றி கூறிய ரணில்

Share

மகிந்தவுக்கு நன்றி கூறிய ரணில்

நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்குமாறு தான் முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கே நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, ​​நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினரே தன்னுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் தற்போது நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...