3 39
உலகம்

தன் தாய் டயானாவின் நகைகளை மேகன் அணிவதை விரும்பாத இளவரசர்

Share

தன் தாய் டயானாவின் நகைகளை மேகன் அணிவதை விரும்பாத இளவரசர்

தன் தாய் இளவரசி டயானாவின் நகைகளை இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அணிவதில் இளவரசர் வில்லியமுக்கு விருப்பம் இல்லையாம்.

இளவரசர் ஹரி, விவாகரத்து பெற்றவரும், அமெரிக்க நடிகையுமான மேகனை திருமணம் செய்யப்போவதாக கூறியது, அவரது அண்ணன் வில்லியமுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

மேகனை மணந்துகொள்வதில் அவசரப்படாதே என அவர் தனது தம்பிக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனாலும், ஹரி யார் சொன்னதையும் கேட்கவில்லை.

திருமணம் நெருங்க நெருங்க, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உரசல் முற்றியுள்ளது.

ஆகவே, ஹரியின் மணமகளான மேகனை, தன் தாய் டயானாவின் நகைகள் எதையும் அணியவிடக்கூடாது என தங்கள் பாட்டியாரான மறைந்த மகாராணி எலிசபெத்திடம் வற்புறுத்தினாராம் வில்லியம்.

விடயம் என்னவென்றால், வில்லியமுடைய மனைவி கேட், டயானாவின் மோதிரத்தை அணிந்திருந்திருக்கிறார்.

எப்படியும், திருமணத்தின்போது டயானாவின் நகைகள் எதையும் மேகன் அணியவில்லை. என்றாலும், வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேகன் டயானாவின் மோதிரம் ஒன்றை அணிந்துகொண்டார்.

இந்த விடயங்கள், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் என்பவர் எழுதியுள்ள Catherine, The Princess Of Wales : The Biography என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...