5 38
இலங்கைசெய்திகள்

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை தவிர்த்த ஷிரந்தி

Share

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – நாமல் மீது தாக்குதல் முயற்சி – மோதலை தவிர்த்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்த லொஹான் ரத்வத்தவுடனான வாக்குவாதம், அடிதடி வரை சென்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருந்தவர்களின் தலையீட்டினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

முறுகல் நிலை அடிதடி வரை சென்ற நிலையில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தலையிட்டு சண்டையை தடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு, ஒரு கட்சியாக ஆதரவளிக்க வேண்டும் என லொஹான் ரத்வத்த இதன்போது வலியுறுத்தி கூறியுள்ளார்.

இதன்போது கட்சி என்ற ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டிய போதே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...