14 12
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

Share

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பாதாள உலகக்குழுவினர் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குவது பாதாள உலகக்குழுவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், அமைச்சரவையும் நீதிமன்றை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்படுவதாக ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திருத்தச் சட்ட மூலம் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் நீதித்துறையை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, உள்ளுராட்சி மன்ற நியமனங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் நீதிமன்றம் மூன்று தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சிகள் பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து மட்டுமே பேசுவதாகவும்,பொலிஸ் மா அதிபர் குறித்த உத்தரவிற்கு பாதாள உலகக் குழுவினரே அதிகம் மகிழ்ச்சியடைந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவினர் எதிர்க்கட்சிக்கு பாதுகாப்பு வழங்குவதனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...