14 12
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

Share

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பாதாள உலகக்குழுவினர் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குவது பாதாள உலகக்குழுவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், அமைச்சரவையும் நீதிமன்றை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்படுவதாக ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திருத்தச் சட்ட மூலம் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் நீதித்துறையை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, உள்ளுராட்சி மன்ற நியமனங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் நீதிமன்றம் மூன்று தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சிகள் பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து மட்டுமே பேசுவதாகவும்,பொலிஸ் மா அதிபர் குறித்த உத்தரவிற்கு பாதாள உலகக் குழுவினரே அதிகம் மகிழ்ச்சியடைந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவினர் எதிர்க்கட்சிக்கு பாதுகாப்பு வழங்குவதனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...