9 15
இலங்கைசெய்திகள்

ஹரின் பெர்னாண்டோவிடம் இருந்து அனுரவுக்கு பறந்த கடிதம்

Share

ஹரின் பெர்னாண்டோவிடம் இருந்து அனுரவுக்கு பறந்த கடிதம்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissnayakke) அனுப்பியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படவில்லை என அனுர விமர்சித்திருந்தார்.

அத்துடன், தான் அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவுகளை வெளியிடவுள்ளதாகவும் அவர் ஜப்பானில் வைத்து கூறியிருந்தார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் தங்களது வெளிநாட்டு பயண செலவுகளை வெளிப்படுத்துமாறும் அனுர சவால் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயண செலவுகள் தொடர்பான விபரங்களை கடிதம் மூலம் அனுரவுக்கு அனுப்பியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்த கடிதத்தில் தம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமைக்காக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அனுரவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...