2 28
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

Share

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட யுகம்: பொறுப்புக்கூறலை புதுப்பித்துள்ள கனேடிய பிரதமர்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) , அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3,000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றது மற்றும் நாட்டின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான, கனடாவின் உறுதிப்பாட்டை அவர் இந்த அறிக்கையில் புதுப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், கனேடிய நாடாளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

இது, உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனேடியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூருவதில், கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் திட்டத்தை கனடா ஸ்தாபித்தது என்றும் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனேடியர்களுடன் இணைந்து கொள்வதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“கனேடியர்களாக ஒன்றாக, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம்” “அத்துடன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க மீண்டும் உறுதியளிப்போம்” என்றும் கனேடிய பிரதமர், கறுப்பு ஜூலை படுகொலைகளின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...