6 22 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கையிருப்புகளை பாதிக்கும் வகையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் திட்டத்தின் படி நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...