1 24
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டம்: தேசிய அடையாள அட்டையில் சிக்கல்

Share

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டம்: தேசிய அடையாள அட்டையில் சிக்கல்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதற்கட்ட நிவாரணங்களை பெறத் தகுதியுடைய 18 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளில் இரண்டு இலட்சம் பேர் இதுவரை வங்கிக் கணக்கை திறக்காததுடன் தேசிய அடையாள அட்டையிலும் பிரச்சினை உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்வெசும இரண்டாம் கட்ட விசாரணையின் கீழ் புதிதாக விண்ணப்பித்தவர்களின் தகவல், சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

முதற்கட்டப் பயனாளிகளில் 135,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை எனவும், எஞ்சிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பதும், அதிகாரிகள் சரியான தகவல்களை தெரிவிக்காமையினாலும், வங்கிக் கணக்குகளில் சிக்கல் உள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சில பயனாளிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை சரிபார்த்த போது அதே இலக்கத்தில் மேலும் ஒருவர் இருப்பதன் காரணமாக நிவாரணங்களை வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் பயனைப் பெற்றுப் பெற்றுக் கொள்வதற்காக 4 இலட்சத்து 55 697 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை மீளாய்வு செய்யும் பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...