24 669866bd8489d
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் மகிந்தவின் பதில்

Share

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் மகிந்தவின் பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர் குறித்து ராஜபக்சவிடம் கேட்டபோது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் தங்களிடம் உள்ளது என்றும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளரின் பெயரைச் சொன்னால், அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது உங்களுக்கு புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதி தம்முடன் இணைந்துச் செல்லத் தயாராக இருந்தால், தாங்கள் அவருக்கு முழுமையாக ஆதரவளிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...