12 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

Share

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...