16 3
இலங்கைஉலகம்செய்திகள்

மாஸ்டர் ஷெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறிய இலங்கைப் பெண்

Share

மாஸ்டர் ஷெப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறிய இலங்கைப் பெண்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர் ஷெப் (MasterChef Australia) சமையற்கலைப் போட்டியில் இலங்கைப் பெண் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்ற பெண் இறுதி மூன்று போட்டியாளர்கள் வரையில் முன்னேறியிருந்தார்.

எனினும் இறுதிப் போட்டிக்கான இரண்டு போட்டியாளர்கள் பட்டியலில் சாவிந்திரிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியாளர்களாக ஜோஸ் பெரி மற்றும் நாட் தாய்புன் ஆகீயோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சாவிந்திரி இலங்கை உணவு வகைகளை சுவையாக சமைத்து போட்டியில் அசத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நேர முகாமைத்துவம் தொடர்பில் சவிந்திரி சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டிருந்தது.

மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு போட்டியாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...