24 6694cfa1520a4
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: சிக்கிய பல்கலைக்கழக மாணவி

Share

கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொறளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி இதுவரையில் அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், எனினும் அழைப்பு விடுத்த நபர் யார் என்பது பற்றி இதுவரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...