24 6694cfa1520a4
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: சிக்கிய பல்கலைக்கழக மாணவி

Share

கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொறளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி இதுவரையில் அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், எனினும் அழைப்பு விடுத்த நபர் யார் என்பது பற்றி இதுவரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...