24 66937802268b6
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு நாளை முதல் தாய்லாந்து வழங்கவுள்ள வாய்ப்பு

Share

இலங்கையர்களுக்கு நாளை முதல் தாய்லாந்து வழங்கவுள்ள வாய்ப்பு

லங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் (15) அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் (Traisuree Taisaranakul) தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல், தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை (DTV) அறிமுகப்படுத்துகிறது.

இந்நிலையில், தாய்லாந்திற்கு இலங்கையர்கள் காகித விசா பெறாமல் பயணம் செய்யும் முதல் தடவை இதுவாகும் என ட்ரைஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தாய்லாந்து குடிமக்கள் ஏற்கனவே 10 அமெரிக்க டொலர் செயலாக்கக் கட்டணத்திற்கு உட்பட்டு விசா இல்லாமல் இலங்கைக்கு வருகை தரலாம்.

மேலும், தாய்லாந்தின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கை, விசா இல்லாத தங்கும் நேரத்தை 30 முதல் 60 நாட்களுக்கு நீடிக்கிறது.

இதற்கு பயணிகள் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்கு அல்லது முன்னோக்கிச் செல்வதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி
இந்த மாற்றம் சுற்றுலாப் பயணிகளுக்கும் குறுகிய கால வணிகப் பயணிகளுக்கும் பயனளிக்கும் என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளதோடு, ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு பயணம் செய்கிறார்கள்.

குறித்த விசா 180 நாட்கள் வரை தங்க அனுமதிப்பதோடு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் டிடிவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேடவோ, பயணம் செய்யவோ அல்லது ஆராய்ச்சி நடத்தவோ அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ட்ரைஸ்ரீ தைசரணகுல் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...