24 66937802268b6
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு நாளை முதல் தாய்லாந்து வழங்கவுள்ள வாய்ப்பு

Share

இலங்கையர்களுக்கு நாளை முதல் தாய்லாந்து வழங்கவுள்ள வாய்ப்பு

லங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் (15) அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் (Traisuree Taisaranakul) தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல், தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை (DTV) அறிமுகப்படுத்துகிறது.

இந்நிலையில், தாய்லாந்திற்கு இலங்கையர்கள் காகித விசா பெறாமல் பயணம் செய்யும் முதல் தடவை இதுவாகும் என ட்ரைஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தாய்லாந்து குடிமக்கள் ஏற்கனவே 10 அமெரிக்க டொலர் செயலாக்கக் கட்டணத்திற்கு உட்பட்டு விசா இல்லாமல் இலங்கைக்கு வருகை தரலாம்.

மேலும், தாய்லாந்தின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கை, விசா இல்லாத தங்கும் நேரத்தை 30 முதல் 60 நாட்களுக்கு நீடிக்கிறது.

இதற்கு பயணிகள் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்கு அல்லது முன்னோக்கிச் செல்வதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி
இந்த மாற்றம் சுற்றுலாப் பயணிகளுக்கும் குறுகிய கால வணிகப் பயணிகளுக்கும் பயனளிக்கும் என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளதோடு, ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு பயணம் செய்கிறார்கள்.

குறித்த விசா 180 நாட்கள் வரை தங்க அனுமதிப்பதோடு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் டிடிவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேடவோ, பயணம் செய்யவோ அல்லது ஆராய்ச்சி நடத்தவோ அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ட்ரைஸ்ரீ தைசரணகுல் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...