24 6692609fbca8b
இலங்கைசெய்திகள்

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள வாகனங்கள்

Share

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள வாகனங்கள்

வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை மையம் (VET) அறிவித்துள்ளது.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 070 3500 525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்ப முடியும் என, மையத்தின் பணிப்பாளர் தசுன் கமகே அறிவித்துள்ளார்.

வாகன சாரதிகள் தமது வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக புகை சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என கமகே வலியுறுத்தியுள்ளார்.

எனினும் சிலர் நேர்மையற்ற முறையில் சான்றிதழைப் பெற முயற்சித்தாலும், பொலிஸ் மற்றும் மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் ஒன்று, அதிக புகை வெளியிடுவது அவதானிக்கப்பட்டால் வாகன உரிமையாளருக்கு பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும்.

எனினும் அந்த பிரச்சினைக்கு உரிமையாளர் தீர்வு காணாவிட்டால், குறிப்பிட்ட வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை மையத்தின் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...