24 66929f5e57109
இலங்கைசெய்திகள்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

Share

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொக்கு பெட்டி என்ற நபரின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபென்ன, குருந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவற்றில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் காணப்படவில்லை. அதற்கமைய, சந்தேகநபர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிளப் வசந்தாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கிளப் வசந்தாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...