24 66926b4f52367
இலங்கைசெய்திகள்

நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் : விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள்

Share

நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் : விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக சிலர் தொடர்ந்தும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறியுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe), நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடமும், சட்டத்தரணிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பிரகடனப்படுத்துவதை தடுக்குமாறு, ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இறுதி பதினோராவது மணித்தியாலத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்கள், மக்கள் மற்றும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும குற்றம் சுமத்தினார் .
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளாக மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு ஆணைக்கு அமைவாக 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் அவதானத்துடன் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 19இன் படி எந்த ஒரு ஜனாதிபதியும் ஐந்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

எனினும் சிலர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீதித்துறையை கேலி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்துடன் சட்டத்தை அறிந்த மக்களும் சட்டத்தரணிகளும் கூட வெட்கமின்றி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.

எனவே நீதித்துறையை மக்களும் சட்டத்தரணிகளும் கேலி செய்யக்கூடாது.

அரசியல்வாதிகளும் ஒரு நாளாவது அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது. ‘நாய் குறி’ என்று குறியிடப்படுவதற்கு முன்பு நாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது பழமொழி என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...