19 2
இலங்கைசெய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

Share

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

இலங்கையில் அமைப்பு ரீதியான சார்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குகள் குறித்து அனைவருக்கும் நீதி அமைப்பு, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

காதுகளை மூடிய நிலையில், பரீட்சை எழுதினர் என்ற முறைப்பாட்டின் கீழ், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தக் கொள்கை, மத அடக்கத்தை பின்பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று அனைவருக்கும் நீதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொள்கையானது முஸ்லிம் பெண்களை பாதிக்கிறது. இது இலங்கையில் முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான மத பாகுபாட்டின் சூழலை நிலைநிறுத்துகிறது என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற பொது நிறுவனங்களில் மாணவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோருவதாக அனைவருக்கும் நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...