24 668c45cc94649
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை

Share

ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை

ஜேர்மனியில்(Germany) கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக, கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாற தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று கடவுச்சீட்டு அலுவலக மூத்த அதிகாரியான ஹெல்மட் டெடி (Helmut Dedy) என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த பலர், விடுமுறையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, எக்ஸ்பிரஸ் டெலிவரியையாவது பெறலாம் என எண்ணி இரண்டாவது முறை கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளார்கள்.

அவர்கள் சுமார் 170 யூரோக்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். அப்படி இரண்டு முறை கட்டணம் செலுத்தியுள்ளோரின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தான் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...