24 668aae2e0fddd 14
இலங்கைசெய்திகள்

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

Share

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது, இன்று (07) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் என்றும் அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான மாணவன், மாணவி, அம்பலாங்கொடையில் ஹிரேவத்த மற்றும் தெல்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மாணவி படுகாயத்துக்குள்ளாகியுள்ளதுடன், மாணவன் சிறிய கீறல் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடருந்து மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...