24 6689375d6a9e9
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில் 

Share

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்

தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் தேசத்தின் தலைவிதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி (Galle) மாவட்ட மாநாட்டில் இன்று (06.07.2024) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ”பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையின் பாதையில் கொண்டு செல்லும் எனது பணியை முடித்து விட்டதால் இனி தேசத்தின் எதிர்காலம், மக்கள் கையிலேயே உள்ளது.

எவரும் தயாராக இல்லாத போதே, நான் தேசத்தை பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது ஜே.வி.பி.யைக் காணவில்லை. மற்றவர்களும் காணாமல் போனார்கள்.

எனினும், நான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுக்களை ஆரம்பித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டதிலேயே இன்று நாடு ஸ்திரதன்மையை அடைந்து கொண்டிருக்கிறது.

அத்துடன், தேசம் தற்போதைய பாதையில் செல்ல வேண்டுமா அல்லது வேறு வழியில் செல்ல வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி, எமது சித்தாந்தத்தை, முன்னரே ஏற்று கொண்டிருந்தால் நாடு, இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்காது.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் வேறு வழியில் சென்று புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். எனவே, தற்போது கட்சி அரசியலை மறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஆகையால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும், மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...