24 667f7cfe0ff26 30
இலங்கைசெய்திகள்

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

Share

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருட தொடக்கத்தில் கூரியர் சேவை நிறுவனமொன்றுக்கு 5 கிலோ கொக்கெய்ன் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  முன்னெடுக்கப்பட்ட சோதணையில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...