1 6
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பெருந்திரளானோர் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி

Share

திருகோணமலையில் பெருந்திரளானோர் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு நேற்று  காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.

தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.

இதனையடுத்து சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITK) மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R .Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து  விமானம் மூலம் திருகோணமலைக்கு (Trincomalee) எடுத்துச் செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு  பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மேலும்  ஞாயிற்றுக்கிழமை (07) இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...