tamilni Recovered 1 scaled
இந்தியாசெய்திகள்

வரதட்சணை வேண்டாம்.. ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

Share

வரதட்சணை வேண்டாம்.. ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் என கேட்டிருப்பது ஆச்சரியமடைய வைத்துள்ளது.

பல இடங்களில் நாம் வரதட்சணை கொடுமையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் வரதட்சணை பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகின்றது. ஆனால், இங்கு ஒரு மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் என்று மணமகள் வீட்டாரிடம் கூறியுள்ளார்.

இந்திய மாநிலமான ராஜஸ்தான், சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது, மணமகளின் வீட்டாரிடம் இருந்து ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் மட்டும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் மணமகன் ஜாகர் பொதுப் பணித் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல மணமகளும் முதுகலை பட்டதாரி ஆவார். அவரும் அரசு பணிக்கு படித்து வருகிறார்.

இதுகுறித்து மணமகன் பேசுகையில், “முதுகலை வரை மனைவியை அவருடைய பெற்றோர் படிக்க வைத்ததே வரதட்சிணை போன்றது தான். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். அதற்கு எனது பெற்றோரும் சம்மதித்தனர்.

எனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் அவரை முதுகலை படிக்க வைத்த காரணத்திற்காக ஓராண்டு சம்பளத்தை அவரது பெற்றோருக்கு கொடுக்க சொல்லியுள்ளேன்” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...