24 667f7cfe0ff26 26
உலகம்செய்திகள்

வெளிநாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர்… தேடுதல் 14 நாட்களுக்கு பிறகு நிறுத்தம்

Share

வெளிநாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர்… தேடுதல் 14 நாட்களுக்கு பிறகு நிறுத்தம்

ஸ்பெயின் நாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர் தொடர்பிலான தேடுதல் நடவடிக்கையை நீண்ட 14 நாட்களுக்கு பின்னர் முடித்துக்கொள்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சுற்றுலா சென்ற 19 வயதேயான Jay Slater என்ற இளைஞரே ஒரு தடயமும் இல்லாமல் மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து மோப்ப நாய்கள், ட்ரோன், ஹெலிகொப்டர் மற்றும் டசின் கணக்கான தன்னார்வலர்கள், அத்துடன் மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் நிபுணர்கள் குழு என தேடியதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது மொத்த தேடுதல் நடவடிக்கையையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் Tenerife பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் ஏதேனும் துப்புக் கிடைத்தால் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 பொலிசார் உட்பட தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரும் குழு கடந்த 24 மணி நேரத்தில் கடைசி கட்டத் தேடுதலை முன்னெடுத்துள்ளனர். கடைசியாக Jay Slater காணப்பட்டப் பகுதியில் இருந்து, சுற்றுவட்டாரம் முழுவதுமாக தேடியுள்ளனர்.

தற்போது சிறப்பு குழுவினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும், தினசரி நடவடிக்கைகள் தொடரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, Jay Slater-ன் பெற்றோருக்கும் தற்போதைய தகவல் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 17ம் திகதி உள்ளூர் நேரப்படி பகல் 8 மணிக்கு அப்பகுதி நபர் ஒருவருடன் Jay Slater கடைசியாக காணப்பட்டார் என்றும், அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பதில் தகவலேதும் இல்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, ஜெய் மலைப்பகுதியில் தொலைந்து போனால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...